Friday, September 14, 2012

முதல் முறை பார்த்த ஞாபகம்


முதல் முறை பார்த்த ஞாபகம்
நீதானே என் பொன்வசந்தம்

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : இளையராஜா

பாடியவர்கள் : சுனிதி சௌகான்


வருடம் : 2012

முதல் முறை பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்
வசந்தம் வசந்தம்

முதல் முறை  பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சம் எழும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே  உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ  வரும்  ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலிக்கு அடையாளங்களா

வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்
வசந்தம்  வசந்தம்

முதல் முறை  பார்த்த  ஞாபகம்
உன்நிழல் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ
வலியோ சுகமோ எது நீ
நீதானே என் பொன் வசந்தம்
நீதானே என் பொன் வசந்தம்

16 comments:

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்