Thursday, August 9, 2012

நீ பார்த்த விழிகள்

tamilpadapaadalvarigal.blogspot.com

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : 3 (மூணு)


இசைஅமைப்பாளர் : அனிருத்



பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ்ஸ்வேதா மோகன்



பாடலாசிரியர் : தனுஷ்



வருடம் : 2012


நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா


இது போதுமா..இதில் அவசரமா

இன்னும் வேண்டுமா..அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்..நம் வசம் வருமா
உயிர் தாங்குமா..என் விழிகளில் முதல் வலி


நிஜமடி பெண்ணே..தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன்..நடமாட
வலி வலி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை..மெதுவாக


நீ பார்த்த விழிகள்

நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா


நிழல் தரும்

இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே
உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் பாரும் உன்னால்


மணல் இன்றி குளிர் வீசும்

இது எந்தன் siru வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே


நிஜமடி பெண்ணே..தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன்..நடமாட
வலி வலி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை..மெதுவாக


நீ பார்த்த விழிகள்

நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா..இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா..அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்..நம் வசம் வருமா
உயிர் தாங்குமா.. ஓ.. ஓ... ஓ...


No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்